Thursday, April 1, 2010

அன்பு


அன்பினிலே ஒருவகையாம் பாச மாகும்

அதுவன்றி இன்னொன்று நேச மாகும்

அன்பினிலே இன்பியலாம் காத லாகும்

அதற்கும்மேல் ஒன்றுண்டாம் பக்தி யாகும்

அன்பிற்கு அடைக்கும்தாழ் இல்லை என்றார்

அதற்குண்டோ ஒப்புவமை சொல்லு தற்கே

அன்பிற்கே காவியங்கள் ஆக்கித் தந்தார்

அதன்சக்தி எழுத்தினிலே வடித்து வைத்தார்



ஒருசொல்தான் உலகத்தை ஆட்டி வைக்கும்

உள்ளத்தைக் கோயிலாக்கி நிறைந் திருக்கும்

இருவரையே இணைத்துத்தான் இன்பம் சேர்க்கும்

இணைப்பினிலே புது உயிரைப் படைத்துக் காட்டும்

வரும்துயரம் அன்புணர்வால் மறைந்து ஓடும்

வற்றாத அமைதியிலே அழைத்துச் செல்லும்

உருக்கிவிடும் தன்மையதாம் எல்லை இல்லை

உயிர்காக்கும் அன்பின்றி வாழ்வு முண்டோ

No comments: